Friday, September 28, 2007

மழையில் குளித்த இயற்கை எத்தனை அழகு; எத்தனை பசுமை ;எத்தனை குளிர்மை..!!










எனது வீட்டைச்சுற்றிய பகுதி.


Wednesday, September 26, 2007

மலையின் உச்சியில் விலங்கொன்றின் இருப்பு.!


படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Tuesday, September 25, 2007

பேரொளி.











Friday, September 21, 2007

நிழலில் மொழி எழுதி...




Thursday, September 20, 2007

சாட்சி.







என் வழக்கு
ஒத்தி வைக்கப்பட்டது.
வாய்க்குள்
துணி அடைத்து
கைகளை
துவக்கின்பிடியால்
அடித்து முறித்து
வன்புணர்வுக்காய்.

தப்பி ஓடி
என் உயிர் காக்க
தோட்ட வெளியுள்.

சன்னம் பட்டதில்
சரிந்து விழுந்தேன்
முட்புதர் பற்றையுள்.

மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்.

வழக்குத் தொடர்ந்தேன்
மெல்லிய உணர்வை
ரணப்படுத்தியதற்காய்.
என் வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது.


என் மன
எரிப்பிளம்பின்
கசிவும்
பூகம்ப அதிர்வின் பின்
மரணித்துக்கிடக்கும்
மக்களின்
உறவின்
வேதனையின் கசிவும்
உடல் வதையின்
ஆழ் மன பச்சையின்
தளும்பும்
சாட்சியாய் போதாதாம்.

என்க்கு நடந்த
கொடுமையின்
கோரத்தை
கண்ட சாட்சி
யாராவதுவாருங்கள்.


மீண்டும் என்னை
கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னைகொல்ல.

நளாயினி

நன்றி தை
நன்றி சக்தி.

Wednesday, September 19, 2007

மனசின் வழி..




இரவின் நிழலாய்

நீள்கிறது விழிப்பு.


கதவுகளற்ற

யன்னல் கம்பிகளினூடே

ஒளிரும் விழிகளுடன்

கரும் பூனை ஒன்று

பாய்ந்து மறைகிறது.



கண்களை மூடுகையில்

இனம்காணமுடியா

சின்னதும் பெரியதுமாய்

மீன்குஞ்சுகள்

நீந்திப்பரவுகிறது.


குருவி ஒன்றின்

கீத ஒலி

ஸ்வரசச்ரமாய்

இறங்குகிறது உடலுள்.


உணர்வுகள் தோறும்

மெதுமெதுவாய்

பூக்கள் முகையவிழும் ஓசை


எரிவுடன்

விழிவழியே

திரள்கிறது கண்ணீர்.


போர்வையை

ஒருக்கழித்து எழும்புகையில்

வானத்தில் விடிவெள்ளி.


சூரியன் தனது பயணத்திற்காய் மீண்டும்.


நளாயினி
10- 08-2007

Sunday, September 16, 2007

ஓவியம். 09/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Wednesday, September 05, 2007

ஓவியம். 04/05/2006

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Sunday, September 02, 2007

வண்ணங்கள்.



புகைப்படப் போட்டிக்கு என்னுடைய படைப்புகள்.
இதுபற்றி விபரம் அறிய இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.