Thursday, January 31, 2008

உயிர்த்தீ...... 11




இருட்டறையுள்
எப்படியோ ஊடறுத்து
உட்புகுந்த ஒளிக்கற்றையாய் -நீ
அது சரி என்னை
என்ன செய்யப் போகிறாய்?!

உயிர்த்தீ...... 10






நட்புக்கு ஏது பால்?
எல்லோரும் தாராளமாக
நட்பை காதல் செய்வோம்.

உன்னை நான் இங்கு
பத்திரமாக பாதுகாக்கிறேன்.
நானும் பாவம்.
என்னையும் அங்கு
பத்திரமாக பாதுகாத்துக்கொள்.

உலகில் எஞ்சி இருப்பது
நட்பு ஒன்று தான்.
நீயும் நானும்
கை கோர்த்தே சென்றால்
அந்த வானம் கூட
வெகு தூரமில்லைத்தான்.

உன் வருகைக்காக ஏங்கி நின்றேன்.
அருகில் உள்ள பூக்கள் எனைப்பார்த்து
ஏளனமாய் சிரிக்கின்றன.
நட்பு என்ன
கேட்டதும் கிடைத்து விடும் வரமா?!! என.

என்னோடு பேச
நீ எப்போதும் வேண்டும்.

நீ எனக்கருகில் இருந்தால்
துன்பமே நெருங்காது.


துன்பம் பலதை இறக்கி வைத்தேன்.
அதற்காய் நீ அவற்றை காவிச் செல்லாதே.

நான் விடும் பிழைகளை
அடிக்கடி நீ தட்டிக்கேட்டதால்
பிழைவிட போகிறேன் என
எப்படி என்னால்
அனு மானிக்க முடிகிறது இப்போ?!!
நன்றிடா செல்லம்.


மிகவும் கோபமாய்த்தான் இருந்தேன்
உன்னைக்கண்டதும் எப்படிப்போனது?

பார் இந்த மெழுகுதிரியை
அப்படித்தான் எனக்குள்ளும்
பிரகாசத்தை ஏற்றி வைத்தாய்.

இந்த அலைகளின் தழுவல்போல்
எப்படி எனக்குள்
அப்படி ஒரு சுகத்தை
உன்னால் தர முடிந்தது.


நீ சிரியாது என்னை
சிரிக்க வைக்கிறாய்.
உனக்குள் உள்ள
சோகத்தில் கொஞ்சத்தை
இறக்கி வையேன்.


என்னை சிரிக்க வைத்தது போதும்
விடைபெறுவோமா?

Thursday, January 24, 2008

ஓவியம். 08/01/2008




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny

Tuesday, January 08, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 5)



1 7)

ன் விழிகளே
இவ்வளவு கதைகளைச்
சொல்லும் போது
நீ கூட
நல்ல ஒரு
எழுத்தாளன்
ஆகலாமே.

18)

ட்பு என்பதை
உணர்வு பேசும்
காதல் என்பதை
இதயம் பேசும்.
எனக்குள்ளும்
உனக்குள்ளும்
உணர்வும்
இதயமும
ஒன்றாய் கலந்து
பேசுகிறது.

19)

ன் விழிகள் சொல்லம் ஐhலம்
என் முத்தத்தின் ஊற்று.
உன் விழிகள் சொல்லும் கதைகள்
என் முத்தத்தின் அத்திவாரம்.
உன் விழிகள் சொல்லும் தாபம்
என் முதத்தத்தின் சத்தம்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....