Friday, February 29, 2008

அஞ்சலி...


Thursday, February 14, 2008

உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா.


உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ உங்கள் காதலை சொல்ல தயங்குகிறீர்களா. இந்த மடல்களை அஞ்சல் செய்யுங்கள்.எல்லாம் ஒரு சின்ன கெல்ப்தான். நோ நோ தாங்ஸ் எல்லாம் எனக்கெதற்கு. நீங்கள் என்Nihய் பண்ணுங்க. அதுவே போதும். happy valentin .







Copyright © nalayiny


காதலர் தின ஸ்பெசல் ஓவியங்கள்.











ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Copyright © nalayiny

Wednesday, February 13, 2008

காதலர் தின ஸ்பெசல் கவிதை.


*
கண்ணிமைப்பொழுதில்
மின்னலாய் வந்து நீ தந்த முத்தம்
ஆகா முதல் முத்தம்
தெவிட்டாத தேன் தழிழாய்
இன்றும் கன்னத்தே ஒட்டி.
கனலாக்கும் என்னை.

*
மழைத்துளியாய்
எனக்குள் புகுந்து
என்னை பசுமையாக்குகிறாய்.
எப்படி முடிகிறது
உன்னால்
அத்தனை அன்பையும்
என் செல்களுக்குள் செலுத்த.

*
எனக்கு இதுவரை எதுவுமே
அழகாய் தெரிந்ததில்லை.
உன்னைப்படித்தேன்.
அடடே ..!
அழகிய கவிதை
எனக்கு நீ.

*
கவிதைகளை படிப்பதே
எனது மூச்சு.
உன் காதல்
எனக்கு கிடைத்ததும்
கவிதை படிப்பதையே
நிறுத்தி விட்டேன்.
நீயே எனக்கொரு
அழகியகவிதைதானே.

*
கவிஞர்களே..!
எனது காதலனைப்போன்ற
அத்தனை தன்மைகளையும்
கொண்ட கவிதையை
எனக்கு இனி நீங்கள்
ஒரு போதுமே தந்து விட முடியாது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Wednesday, February 06, 2008

உயிர்த்தீ...... 17



அழகிய ரம்மியம்
நிறைந்த மாலைப்பொழுதில்
புத்தகம் ஒன்றை
கையில் எடுத்து
வாசித்த போது தான்
தெரிந்தது
பல பக்கங்கள்
கிழித்தெறியப்பட்டதாய்.
புத்தகத்தை என்
நெஞ்சோடு அணைத்து
விரல்களால்
நீவி விட்டபடி
என்னை நானே
தேற்றிக்கொண்டேன்.
இதை விட என்னால்
என்ன செய்து விடமுடியும்
அந்த புத்தகத்திற்காய்.

Tuesday, February 05, 2008

உயிர்த்தீ...... 15 ,16




மனதை கவர்ந்த
பூவாய்.
கிட்டச்சென்று
அதன் அழகை
ரசித்த போது தான்
தெரிந்தது
என்னைப்போல்
சில இதழ்கள்
உதிர்ந்து போய்
இருக்கிறது என்பது.




உனக்குள்ளும் பல
கசங்கிய கவிதைகள்
எனக்குள்ளும் தான்.
அதனால் தான்
நாம் நட்பை
தேர்ந்தெடுத்தோமோ?

Monday, February 04, 2008

உயிர்த்தீ...... 15




நல்லதொரு
கவிதை வரியாய்
என் மனதுள்
தீ மூட்டிச்சென்றவனே!.
நான் எரிந்து
கொண்டிருக்கிறேன்
புரிகிறதா உனக்கு.

Sunday, February 03, 2008

உயிர்த்தீ...... 14




மனதை கவர்ந்த
புத்தகம் ஒன்றை
கண்டெடுத்தேன் .
பிரித்து படிக்க மனமின்றி
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
பிரமை பிடித்த பைத்தியமாய்.

Saturday, February 02, 2008

உயிர்த்தீ...... 13




மூர்ச்சையாகும்
தறுவாயில்
ஒட்சிசனாய்
உன்னை நான்
சுவாசித்துக்கொண்டு
உயிர் பிளைத்தவள் .

சாவின் எல்லை வரை
நான் சுவாசிப்பதற்கு
உன் அனுமதி தேவை .

இல்லை என்றால்
சொல்லிவிடு
நான் உயிர் துறக்க.

Friday, February 01, 2008

உயிர்த்தீ...... 12




என் நினைவெல்லாம்
அள்ளிப்போனவனே!
என் சுய புத்தியையாவது
திருப்பி தாவேன்.