Wednesday, February 06, 2008

உயிர்த்தீ...... 17



அழகிய ரம்மியம்
நிறைந்த மாலைப்பொழுதில்
புத்தகம் ஒன்றை
கையில் எடுத்து
வாசித்த போது தான்
தெரிந்தது
பல பக்கங்கள்
கிழித்தெறியப்பட்டதாய்.
புத்தகத்தை என்
நெஞ்சோடு அணைத்து
விரல்களால்
நீவி விட்டபடி
என்னை நானே
தேற்றிக்கொண்டேன்.
இதை விட என்னால்
என்ன செய்து விடமுடியும்
அந்த புத்தகத்திற்காய்.

2 comments:

  1. நாம் சாதாரணமாய் காணும் பொருளில்,நிகழ்விலும் வாழ்வை இணைத்து சொல்லும் பாங்கு அருமை..

    ReplyDelete
  2. நன்றி பெரியவரே.

    ReplyDelete