Thursday, September 11, 2008

உயிர்த்தீ...... (18------22)


*
வாழ்க்கை அது
எத்தனை இன்பமானது!!
தெரியும் எனக்கும்.
ஆனாலும்
சுயநல கூடுகளுக்குள்
தெரியாமல்
மாட்டுப்பட்ட
அனுபவங்கள் தான்
எனக்கு அதிகம்.

*
கவிதையின்
தலைப்புக்கள்
பிடித்ததால்
படிக்க தொடங்கினேன்.
வரிவரியாய் பல
முனகல் சத்தங்கள்.
அத்தனை கவிதைக்குள்ளும்
ஒத்தடம் தேடும்மனசு

*

இந்த பூவுக்குள்ளும்
அழகியதான
ஒரு சின்ன மனசு
எத்தனை ஏக்கங்களை
சுமந்து இருக்கிறது என
எத்தனை பேருக்கு தெரியும்.

*

உயிரே சுவாலையாகி
எரிந்து நான் சாம்பராகும் முன்
உன்னைக் கண்டேன்.
அத்தனை வேகமாய்
எப்படி உன்னால்
அத்தீயை
நட்புடன் அன்பு கலந்து
அணைக்க முடிந்தது.

அன்பு வார்த்தைக்காய்
எத்தனை நாள் அழுதிருப்பேன்.

இந்த வார்த்தை போதாதென்று
நீயே தினம் அருகில் வேண்டும் என்றால்
என்ன மனசிது.!!


*
என் சுய நினைவை
இழக்க செய்தவனே!
படர்ந்திடு இனி என் மீது
நட்புக் கொடியாக.