Sunday, June 15, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (11)


*
உனக்கான
கோபம் என்கானது தானே.
அந்த கோபங்களால் கூட
நான் மகிழ்ந்து தான் போகிறேன்.

*
எத்தனை கேள்விகளை
உன் முன்னே பரப்பியபடி.
அத்தனை கேள்விகளும்
மௌனமாய் நீ
காரணம் என்னவோ?
உனக்கும் அவை
பூர்த்தி செய்யப்படாத
கேள்விகள் என்றாவது
சொல்லித்தெலையேன்.
உனக்கு திமிர் அதிகம்
இல்லை என்றால்
சொல்லி இருப்பாயே.

*
உனது ஈகோவை விட்டிறங்கு.
அது தான்
நமது வாழ்க்கைக்கு நல்லது.


*
உனது பார்வையால் மட்டுமே
நான் மலர்ந்து கொள்கிறேனே.
அதெப்படி...!

*
உனது பார்வையில்தான்
எத்தனை சூரியர்கள்.
எனக்கு மட்டுமே தெரிந்த
புதிற்கான விடை இது.

*
மொட்டு பூப்பது இயல்பு .
எனக்கான மகரந்தங்களை
எடுத்து வந்தவன் நீ.

*
விழி திறந்து
மொழி பகர்ந்து
மௌனமொழி பேசி
ஆகா அற்புதமொழிகள் .
எம்மைப்போல் யாரும்
இவ்மொழிகள் உணர்ந்திரார்.


*
முத்தம் ஒன்று தந்தாய்
அதன் ஈரப்பதன்
அழியாமல் இன்றுரை.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

ஓவியம். 09/06/2008




ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Sunday, May 25, 2008

எங்கள் வலிகளை.......

Monday, May 19, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! (10)


*
வருவேன் என கூறிச்சென்றாய்.
வரவே இல்லை
என் நெஞ்சோரத்து கனவுகள்
யாவுமே பசுமை இழந்து.
பட்டமரமாய் நான்.

*
வராவிட்டால் என்ன..!
வசந்தங்கள்
தொலைந்தா போனது.
நீ தந்து சென்ற
சுவாசங்கள்
என்னை அழகு படுத்தும்.

*
நீ வராமல் இருப்பது
நல்லது....!
கவிதைகளுக்கான
விதையாய் நீ.
எனது கவிதை கூட
நீ காணாமல் போகும்
தருணங்களில் தான்
உத்வேகம் கொள்கிறது.

*
நாளைய சந்திற்பிற்காய்
என்ன பேசலாம் என
பல தெரிவுகளாய்.
"தேவையற்ற பேச்சு வேண்டாம் .
காலநிலை பற்றி பேசுங்கள்"
என கூறியது இப்போது உறைக்கிறது.

*
"இங்கு நல்ல மழை.
அங்கு என்னவோ?"
"நல்ல பனி
இந்த நேரத்தில் கேக்கும் கேள்வியா? "
நீ பேசியது
இன்று புரிகிறது.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Monday, May 12, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 9)


*
உணர்வுகளில் கலந்த பின்
உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளி
தாமரை இலையின் மேல்
உருண்டோடும்
தண்ணீரை
ஒத்தது.

*
கோபமாக இருந்தாலும்
நினைவுகளால்
பேசிக்கொண்டு தானே
இருக்கிறோம்.
தென்றலில் கலந்து விட்ட
மலரின் நறுமணம் போல்.

*
தென்றலாய்த்தான்
என்னைத் தழுவினாய்.
புயலை பூகம்பத்தை
எரிமலையைக் கூட
என்னுள் உன்னால்
தோற்றுவிக்க முடிகிறதே..!!??

*
உனக்கும் எனக்குமான
இந்த கோபங்களால் தான்
காதல் நம்மை
விழுங்கிக்கொள்கிறது
என நினைக்கிறேன்.


நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Sunday, May 11, 2008

வாழ்வுப்பயணத்தில் தம் முகமிழந்த அம்மாக்கள் அனைவருக்கும் இவ் ஓவியம் சமற்பணம்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny

Tuesday, April 01, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 8)


*
இதழுக்கு அடக்கமாய்
எத்தனை முத்தங்களை
கோர்த்து வைத்திருந்தேன்.
உன்னைக் கண்டதும்
எப்படி நழுவியது?

*
எங்கே தொலைந்தது என
தேடிக்கொண்டிருந்தேன்
என் நாணம் எனும்
மலர்த்தோட்டத்து
அடிவானில் அழகு காட்டி நின்றது.

*
என் அத்தனை முத்தங்களின்
கோர்ப்புத்தான் வானவில்லாய்.
வானவில்லே இத்தனை அழகென்றால்
என் முத்தம்
எத்தனை அழகாக இருக்கும்.?!!
அடடா..!
நீ யோசிப்பது தெரிகிறது.

*
வானவில்லின் அத்தனை குணங்களும்
என் முதத்தத்திற்கு உள்ளது
வரும் போகும்.
கண்கள் அதனை ரசிப்பதுபோல்
முதத்தையும் உடல் நரம்புகள் உணரும்.

*
முத்தத்தை
கொடுத்து விடு
கொடுத்து விடு
என உணர்வு மண்டலங்கள்
சொல்லிக்கொண்டாலும்
இந்த நாணத்தை வெல்லத்தான்
இன்னும் முடியவில்லை.

*
ஒவ்வொரு சந்திப்பின் போதும்
மூர்க்கத்தனமாக
சிந்தித்துக்கொண்டாலும்
சூரிய மறைவின் போது
வானம் தோன்றும்
காட்சி மாற்றமாய்
நணம் வந்து தொலைக்கிறது

*
நாணத்தை வெல்லுவதற்கு
ஏதும் ஐடியா கொடேன்.
இதைக் கூட சொல்ல முடியாமல்
என் தலை
சூரிய அஸ்த்தமனத்தின் போது உள்ள
சூரியகாந்திப் பூவைப்போல்
தலையை கவிழ்த்துக்கொள்கிறதே...!

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Monday, March 31, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 7)



*
மர அடியில்
உதிர்ந்த இலைகள்.
நுனிப்பகுதியில்
இன்னும் பல இலைகளை
தளிர்க்கச்செய்தபடி
கவிதைகளாய்...!
அப்படித்தான் நீ எனக்குள்.

*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.

*
வானம்
குளித்து முடித்து
இறுதியாய்
வீழ்ந்த மழைத்துளியில்
சிலிர்த்துக்கொண்ட
பூவைப்போல்
பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:

*
உன் கைப்பிடியின் மென்மை
அத்தனை இயற்கையையும்
நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள்.

*
இந்த இயற்கையின் அவசியம்
அத்தனை உயிர்க்கும் எப்படியோ
அதைப்போலவே எனக்கு நீ.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....