Monday, March 31, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 7)



*
மர அடியில்
உதிர்ந்த இலைகள்.
நுனிப்பகுதியில்
இன்னும் பல இலைகளை
தளிர்க்கச்செய்தபடி
கவிதைகளாய்...!
அப்படித்தான் நீ எனக்குள்.

*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.

*
வானம்
குளித்து முடித்து
இறுதியாய்
வீழ்ந்த மழைத்துளியில்
சிலிர்த்துக்கொண்ட
பூவைப்போல்
பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:

*
உன் கைப்பிடியின் மென்மை
அத்தனை இயற்கையையும்
நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள்.

*
இந்த இயற்கையின் அவசியம்
அத்தனை உயிர்க்கும் எப்படியோ
அதைப்போலவே எனக்கு நீ.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

4 comments:

தமிழன்-கறுப்பி... said...

உன் கைப்பிடியின் மென்மை
அத்தனை இயற்கையையும்
நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள்//

எதையோ உணர்கிறேன்...
(பிடி குடுக்க மாட்டம்ல)

தமிழன்-கறுப்பி... said...

//வானம்
குளித்து முடித்து
இறுதியாய்
வீழ்ந்த மழைத்துளியில்
சிலிர்த்துக்கொண்ட
பூவைப்போல்//

பொங்குகிறது... இளமையும், கவிதையும்...காதலும்...

தமிழன்-கறுப்பி... said...

பூக்கள் இன்னும் நிறையப்பேசட்டும்....

(எப்படி இருக்கிறீர்கள், எல்லோரும் சுகம்தானே...)

நளாயினி said...

எல்லோரும் நலம். கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தமிழன்.