Sunday, July 22, 2007
Wednesday, July 18, 2007
காலத்துயர்.

நேற்று வீதியில் நடந்து போகும் போது
ஒரு குழந்தை ஓடிவந்து
தான் அழகாக இருக்கிறேனா என
என்னைக்கேட்டு ஓடி மறைகிறது
சிரிக்கும் விழிகளோடு.
எனது குழந்தை
இச்சு இச்சென முத்தம் வைத்து
கன்னம் நனைக்கிறாள்
நான் கேக்காமலே.
வாவிக்கரையில் மனதாற நடந்த போது
நீந்தியும் பறந்தும் வருகின்றன வாத்துக்கள்
எனக்கு சாகஐம் காட்டி
என்னடா இது பனிக்காலம்
நான் நினைத்த மறுநாளே
சூரியன் எனக்கு காட்சிதருகிறான்.
மரங்கள் எல்லாம்
பசுமை இழந்து இருப்பதாய்
சொல்லிப்போனது காற்று.
ஆனால் உனது தொலைபேசி அழைப்பு மட்டும்
நடந்தேறாமல் காலம் துயரோடு கடக்கிறது.
நளாயினி தாமரைச்செல்வன்.
18-07-2007
Friday, July 06, 2007
Wednesday, July 04, 2007
Monday, July 02, 2007
பூக்கள் பேசிக்கொண்டால்........! (1)

இ
ரகசியம் சொல்வதாய்
முத்தமொன்றை
வைத்து தொலைத்தேன்.
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா யாரும்
முறைப்பார்கள்.
**
ஐ
யோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்கும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூடரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.
**
அ
தெப்படி உன் நெற்றியை
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தெரியுமா.
**
உ
ன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையும்
புன்னகையையும்பரிசளிக்கிறாய்..!
**
உ
னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக் கண்டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கேதெரியாமல்
என் செவி தடவிப்போகும்உந்தன் செருமல்.
**
பூக்கள் இன்னும் பேசும்.....
ரகசியம் சொல்வதாய்
முத்தமொன்றை
வைத்து தொலைத்தேன்.
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா யாரும்
முறைப்பார்கள்.
**
ஐ
யோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்கும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூடரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.
**
அ
தெப்படி உன் நெற்றியை
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தெரியுமா.
**
உ
ன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையும்
புன்னகையையும்பரிசளிக்கிறாய்..!
**
உ
னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக் கண்டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கேதெரியாமல்
என் செவி தடவிப்போகும்உந்தன் செருமல்.
**
பூக்கள் இன்னும் பேசும்.....
கவிதையும் நானே. ஓவியமும் நானே. இருப்பு. 2

பூக்கள் என்றான்
அலங்கரிக்க முடிந்தது.
மலர்கள் என்றான்
இறைவனை அர்ச்சிக்க முடிந்தது
பூவையர் என்றான்
மலர்களை சூட முடிந்தது.
மயில் என்றான்
தோகை விரித்து ஆடும் தகுதி
ஆண் மயிலுக்கானாலும்
மழையை ரசித்து ஆடுவதை
பார்க்க முடிந்தது.
குயில் என்றான்
கூவும் தகுதி ஆண் குயிலுக்கானாலும்
அந்த இசையை ரசிக்க முடிந்தது.
பெண்ணாக பிறந்ததனால்
வெறும் ஏற்றுமதிப்பண்டமாகி
வரவேற்பறையை அலங்கரிக்கும்
காகிதப்பூக்களாக
கண்களற்ற மயில்களாக
காதற்ற குயில்களாக
பூச்சாடியுள் வளர்க்கப்படும் செடிகளாக
ஓ... எம் வேர்கள் கிளைகள் கூட
அப்பப்போ வெட்டப்படும்.
மண் தனதியல்பிழக்க
புதிதாய் மாற்றப்படும்.
பல வேர்கள் அறுக்கப்படும்.
பன்னிரண்டு சென்ரிமீற்றர்
இருபத்து நான்கு சென்ரிமீற்றர் என
மாறுபட்ட சாடிகளில்
வளர்க்கப்படுகிறோம்.
எம் வேர்கள்
அதற்குள் உள்ள வளங்களை மட்டுமே உறிஞ்சி.
சூரிய ஒளி இல்லைத்தான்
ஆனாலும் கண்ணாடிகளுக் கூடாக வரும்
சொற்ப ஒளி கொண்டு
பச்சயத்தை தயாரித்து
வாழத்தான் துடிக்கிறோம்.
ஆனாலும் பல பூச்சாடி மரங்கள்
நீர் இன்றி
மண்மாற்ற ஆள் இன்றி
பச்சையம் தயாரிக்க வலுவின்றி
பட்டுத்தான் போகின்றன.
எங்கோ இரண்டொரு செடிகள் மட்டுமே
உயர்ந்து வளர்வதற்காய்
பனியிலும் வெய்யிலிலும்
பூத்து காய்த்து கனிந்து இலையுதிர்த்து
அத்தனை கால மாற்றத்திற்கும் ஈடு கொடுத்து
தனதிருப்பை இழக்காது
வாழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
நளாயினி தாமரைச்செல்வன்
நளாயினி தாமரைச்செல்வன்
9-12-2002
ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Friday, June 29, 2007
இன்று இது தான் ஓகேவா. (றிலாக்ஸ்.)
Thursday, June 28, 2007
Wednesday, June 27, 2007
உயிர்த்தீ......8

பச்சைக் குழந்தையாய்
நான் இருந்த அழுகிறேன்.
என்னை நானே
அறைந்து கொள்ளலாம் போல்
இப்படித்தான் இப்போ
அடிக்கடி உணர்வுகள்
வந்து போகிறது.
எமது உணர்வுகளை
இரகசியமாக வைத்துக்கொள்.
யாரும் வந்து
கொச்சைப்படுத்தி விட்டு
போகக் கூடாது பார்.
நீயும் நானும்
எம்மை நாம்
உணர்ந்து கொண்டது
எத்தகைய உன்னதம்
தெரியுமா?!
வெறும்
காதலையும்
காமத்தையும்
உடலெங்கும் பூசிக்கொண்டு
வாழ்க்கை என்ற
போர்வைக்குள்
பதுங்கிக்கொள்ளும்
இந்த மானிடர்க்கு
எமது உறவும்
அப்படித் தெரியலாம்.
இது வெறும் பருவகால
சந்திப்புப்போல் அல்ல.
இது எத்தகைய தொரு
உன்னத பக்குவ நிலை தெரியுமா.
இதை எந்த
வார்த்தை கொண்டு
அழைக்கலாம்?
காமம் என்கின்ற
கருப்பொருளூடாக
மட்டுமே பார்க்க தெரிந்த
இந்த சமூக சாம்ராச்சியத்தால்
புணர்ந்து அழிக்கப்பட்ட
உள்ளங்களாய்.
அது சரி
இந்த பரந்த பூமியில்
எம்மைப்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில உள்ளங்கள் இருக்குமோ?!!
Tuesday, June 19, 2007
Saturday, June 16, 2007
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ( நவரசம்.) ஓவியம்.
Thursday, June 14, 2007
நான்.
காதல் துய்த்து காதல் துய்த்து
காதல் தோய்த்த பலாச்சுழையாகி
உணர்வுகளை எல்லாம் ஒன்றாய்குவித்து
காதல் நோயில் கிறங்கிக் கிடப்பேன்.
கோபக்கனலை
மென்று விழுங்கி
என்னை நானே
வதைத்துக்கொள்வேன்.
போட்டி பொறாமை
வஞ்சம் பொய்மை
கணையாய் வந்தால்
போதி மரத்துப் புத்தனாவேன்.
அன்புச் சிறையுள்
என்னைப் பூட்டி
அணுவணுவாய்
ரசித்து மகிழ்வேன்
விடுதலை உணர்வை
மென்று தின்று
மனிதநேயம்
வளர்த்துக்கொள்வேன்.
தனிமைச்சுவரை
எனக்குள் அமைத்து
கிழமைக்கணக்காய்
அழுது சிரிப்பேன்.
மௌனம் மௌனம்
நன்றே என்று
மாயச் சிறையுள்
புகுந்து கொள்வேன்.
மழையில் நனைந்து
பனியில் உறைந்து
உணர்வுகள் சாக
மரத்துக்கிடப்பேன்.
நிலத்தில் நீந்தி
நீரில் நடந்து
வெற்றிப் படிகள்
ஏறிமகிழ்வேன்.
காதல் நோய் என்னை வதைத்து
வெறுமை என்னை துரத்தம் போது
கழுவில் ஏற்றி என்னை மாய்த்து
மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறப்பேன்.
நளாயினி
சுவிஸ்.
11/02/2007
காதல் தோய்த்த பலாச்சுழையாகி
உணர்வுகளை எல்லாம் ஒன்றாய்குவித்து
காதல் நோயில் கிறங்கிக் கிடப்பேன்.
கோபக்கனலை
மென்று விழுங்கி
என்னை நானே
வதைத்துக்கொள்வேன்.
போட்டி பொறாமை
வஞ்சம் பொய்மை
கணையாய் வந்தால்
போதி மரத்துப் புத்தனாவேன்.
அன்புச் சிறையுள்
என்னைப் பூட்டி
அணுவணுவாய்
ரசித்து மகிழ்வேன்
விடுதலை உணர்வை
மென்று தின்று
மனிதநேயம்
வளர்த்துக்கொள்வேன்.
தனிமைச்சுவரை
எனக்குள் அமைத்து
கிழமைக்கணக்காய்
அழுது சிரிப்பேன்.
மௌனம் மௌனம்
நன்றே என்று
மாயச் சிறையுள்
புகுந்து கொள்வேன்.
மழையில் நனைந்து
பனியில் உறைந்து
உணர்வுகள் சாக
மரத்துக்கிடப்பேன்.
நிலத்தில் நீந்தி
நீரில் நடந்து
வெற்றிப் படிகள்
ஏறிமகிழ்வேன்.
காதல் நோய் என்னை வதைத்து
வெறுமை என்னை துரத்தம் போது
கழுவில் ஏற்றி என்னை மாய்த்து
மீண்டும் மீண்டும் புதிதாய்ப் பிறப்பேன்.
நளாயினி
சுவிஸ்.
11/02/2007
Wednesday, June 13, 2007
எதிரெதிரே இரண்டு திறந்த கதவு.அதன் ஊடாக ஒரு யன்னல்.
Tuesday, June 12, 2007
ஓவியம். (23/05/2007) 1
Monday, June 11, 2007
Saturday, June 09, 2007
உயிர்த்தீ......7

நாம் எல்லாம்
காதலை மட்டுமே
சுவாசித்து பழகியவர்கள்.
ஆண் பெண் நட்பை
சுவாசிக்க பழக்க வேண்டும்.
நான் இங்கு சொல்வது
சில சமயம்
பைத்தியக்காரத்தனமாக தெரியலாம்.
காதலைப்போன்ற
அத்தனை உணர்வும்
நட்புக்குள்ளும் உண்டு.
பிரிவு ஏக்கம்
இன்பம் துன்பம்
சல்லாபம் தழுவல்
குழந்தை தனம் எல்லாம்.
காதல் தனது ஆட்சியை
பள்ளியறையில்
முடித்துக்கொண்டு
மூச்சடங்கிப்போகிறது.
நட்பு அப்படியல்ல
இதயத்தின் இதயத்துள்
உணர்வின் உணர்வுள்
புதுப்புது அர்த்தங்களை
வாழ்வின் எல்லை வரை
தருவதாய்.
ஆண் பெண் நட்பை
இதுவரை சுவாசிக்க தவறியவர்க்கு
இது புரிய சந்தர்ப்பமேது?
Friday, June 08, 2007
இலக்கு.( ஓவியமும் நானே. கவிதையும் நானே.)
ஓவியத்தின் மேலே கிளிக்செய்தால் நீங்கள் பெரிதாக பார்க்க முடியும்.

பக்கமெல்லாம் முட்புதரும்
நாயின் ஊளை
அக்கம் பக்கம் பார்த்து
மனதில் உறுதி

கால நகர்வில்
சிதைந்து போன
ஒற்றையடிப் பாதை.
நீண்ட தொடராய்.
பக்கமெல்லாம் முட்புதரும்
பாம்புப் புற்றும்.
ஆங்காங்கே
சிதறிக்கிடக்கும் பிணங்கள்.
நாயின் ஊளை
செவிகளை தாக்கி
திகிலை ஊட்டி -என்
நகர்வைத் தடுமாற வைக்கும்.
அக்கம் பக்கம் பார்த்து
திரும்பிப் பார்க்கிறேன்.
நான் மட்டும் தனிய.
மனதில் உறுதி
நடையில் வேகம்.
__________________
நளாயினி தாமரைச்செல்வன்.
Thursday, June 07, 2007
Subscribe to:
Posts (Atom)