Wednesday, November 02, 2005

உயிர்த்தீ......3

மனசு
அதெப்படி இருக்கும்?!
ஆராய்ச்சி ஏதும்
இதுவரை செய்ததில்லை.

ஆனாலும் நான்
ஒரு போதுமே
அதை எடுத்து
தொட்டுப் பார்த்ததுமில்லை
உணர்ந்து
படித்ததுமில்லை.

எங்காவது தன்னை மறைத்தபடி
இந்த உடம்புள்
எந்த இடுக்குகளுக்குள்
இதுவரை இருந்திருக்கும்.!!!

இப்போதாவது
கண்டெடுத்தேனே!!

காமக்கிளர்வுகள் ஏதுமின்றி
உன் பாதச் சுவடுகளையும்
நினைவுகளையம்
சிரிப்பொலிகளையும்
துன்பங்களையும்
தாங்கியபடி.

நட்பா..!? காதலா..!?
பிரித்துப்பார்க்க முடியவில்லை.

எப்படி வேண்டுமானாலும்
இருந்து விட்டுப் போகட்டும்.

இப்போவதாவது கண்டு பிடித்தேனே
எந்தன் மனைசை உந்தன் நினைவுகளோடு.

நளாயினி தாமரைச்செல்வன்.

No comments: