Tuesday, February 05, 2008

உயிர்த்தீ...... 15 ,16




மனதை கவர்ந்த
பூவாய்.
கிட்டச்சென்று
அதன் அழகை
ரசித்த போது தான்
தெரிந்தது
என்னைப்போல்
சில இதழ்கள்
உதிர்ந்து போய்
இருக்கிறது என்பது.




உனக்குள்ளும் பல
கசங்கிய கவிதைகள்
எனக்குள்ளும் தான்.
அதனால் தான்
நாம் நட்பை
தேர்ந்தெடுத்தோமோ?

2 comments:

ரசிகன் said...

நளாயினி அக்கா.. அருமையாக இருக்கிறது...துன்பத்தில் உள்ளவரின் நிலையை,அதே நிலை உள்ளவர்தான் ஓரளவாவது உணர்ந்துக்கொள்ள முடியுமல்லவா?..

நளாயினி said...

ம்.. பிறகென்ன கேள்வி.. உண்மை தான்.