Sunday, September 18, 2005

உணர்ந்து செய்வோம் காதல்

ன்பை வெளிப்படுத்த
தெரியாதவர் எம் இனம்.


துன்பம் இன்பம் என்பர்
உயிரையே கொடுப்பேன் என்பர்
இன்பத்தை நான்கு சுவர்க்குள் -என
நினைத்து அமுக்கி விட்டனர்.


வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும்-ஏன்
நடத்தையிலும் கூட
இன்பம் உண்டு என
அறியாததும் ஏனோ?


காதலது நாளும்
காதல் என்றால்
எம் இனம்
காமமாய் பார்ப்பதும் ஏனோ..!?

காதல் என்றால்..!
வார்த்தையிலும்
ஒவ்வோர் தொடுகையிலும்-ஏன்
நடத்தையிலும் கூட
நாளும் இன்பமாய்
காதல் கொள்வோம்.


நளாயினி தாமரைச்செல்வன்.

2 comments:

erode soms said...

ஜன்னல் தாண்டி
தென்னங்கீற்று தாண்டி
மென் பனிப்போர்வை மேகம் தாண்டி
குட்டிக்குட்டித்தாரகை நடுவே
எட்டிப்பார்க்கும் நட்புநிலா..

நளாயினி said...

கவிதைத்தமிழோடை வந்திருக்கிறீங்கள். றொம்ப சந்தோசமா இருக்கு.