Wednesday, May 30, 2007

எரிந்த நூல் அகம்.

அகரம் எழுதிய மண்ணில்
கல்வித்தடம் பதிக்க
தமிழன் மூச்சாய்

நிமிர்ந்து நின்ற
நூல் அகம்
எரிந்து தவித்த கோரம்.

தழுவிப்புரட்ட
துடித்த கைகள்
சாம்பரை மட்டுமே
தொட்டழுத கோரம்.

விழி வர மறுத்த கண்ணீர்
முளைத்துப்பெருத்த உறுதி
இனவெறிக்கெதிராய்
சபதமெடுத்து
சங்கு முழங்கி
உயிர்த் தீ வளர்க்கும்
வேங்கைகள்.

நற்சிந்தனையை தரமறுத்து
ஏட்டுக்கல்வியையும்
பறித்த இனவெறி
முடிந்ததா?

தலைக்கனம் பிடித்த
தமிழன்.

ஓ! தலைக்கனம்
கல்விக்கனம்
வீரக்கனம்.

இனவெறி அரசால்
என்ன செய்ய முடிந்தது.
_____
நளாயினி தாமரைச்செல்வன்.

No comments: