Tuesday, October 23, 2007

வண்ணக்கலவை எண்ணம்போல்.

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

உயிர்த்தீ...... 9



புரண்டு புரண்டு
படுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
அட உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாக
புரிந்தது எனக்கு.

தூக்கமே வரவில்லையா?!
உன் நினைவால் தான்
தூக்கம் தொலைந்ததா?!
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
ஒட்டிக்கொண்டதா?!

விடை தேட முயன்றேன்.
விடையாக விரிந்தது மனதில்.

தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
எனக்குத் துணையாக
புகுந்து கொண்டது.

இது தான் நட்பின் உன்னதம்.
இப்படியான ஒரு இன்ப அனுபவத்தை
எத்தனை பேர் உணர்ந்திருப்பர்.!

Tuesday, October 16, 2007

நவீன ஓவியங்கள் பற்றி சுகாவின் பார்வை.

மேலதிக விபரங்களிற்கு இதனை கிளிக்செய்யவும்.

http://sukas.blogspot.com/2007/08/blog-post_16.html

ஓவியம். 18/08/2006


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Monday, October 15, 2007

ஓவியம். 17/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Saturday, October 13, 2007

ஓவியம். 08/06/2007

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Thursday, October 11, 2007

ஓவியம். 05/04/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Thursday, October 04, 2007

ஓவியம். 28/05/2007



ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Friday, September 28, 2007

மழையில் குளித்த இயற்கை எத்தனை அழகு; எத்தனை பசுமை ;எத்தனை குளிர்மை..!!










எனது வீட்டைச்சுற்றிய பகுதி.


Wednesday, September 26, 2007

மலையின் உச்சியில் விலங்கொன்றின் இருப்பு.!


படத்தின் மேல் கிளிக்செய்யுங்கள்.

Tuesday, September 25, 2007

பேரொளி.











Friday, September 21, 2007

நிழலில் மொழி எழுதி...




Thursday, September 20, 2007

சாட்சி.







என் வழக்கு
ஒத்தி வைக்கப்பட்டது.
வாய்க்குள்
துணி அடைத்து
கைகளை
துவக்கின்பிடியால்
அடித்து முறித்து
வன்புணர்வுக்காய்.

தப்பி ஓடி
என் உயிர் காக்க
தோட்ட வெளியுள்.

சன்னம் பட்டதில்
சரிந்து விழுந்தேன்
முட்புதர் பற்றையுள்.

மெல்லிய உணர்வை
முட்புதருள் வைத்தே
காமத்தால்
பலாத்காரம் செய்தனர்.

வழக்குத் தொடர்ந்தேன்
மெல்லிய உணர்வை
ரணப்படுத்தியதற்காய்.
என் வழக்கு
ஒத்திவைக்கப்பட்டது.


என் மன
எரிப்பிளம்பின்
கசிவும்
பூகம்ப அதிர்வின் பின்
மரணித்துக்கிடக்கும்
மக்களின்
உறவின்
வேதனையின் கசிவும்
உடல் வதையின்
ஆழ் மன பச்சையின்
தளும்பும்
சாட்சியாய் போதாதாம்.

என்க்கு நடந்த
கொடுமையின்
கோரத்தை
கண்ட சாட்சி
யாராவதுவாருங்கள்.


மீண்டும் என்னை
கூண்டினுள் வைத்து
வார்த்தையால்
வன்புணர்வு செய்து
என்னைகொல்ல.

நளாயினி

நன்றி தை
நன்றி சக்தி.

Wednesday, September 19, 2007

மனசின் வழி..




இரவின் நிழலாய்

நீள்கிறது விழிப்பு.


கதவுகளற்ற

யன்னல் கம்பிகளினூடே

ஒளிரும் விழிகளுடன்

கரும் பூனை ஒன்று

பாய்ந்து மறைகிறது.



கண்களை மூடுகையில்

இனம்காணமுடியா

சின்னதும் பெரியதுமாய்

மீன்குஞ்சுகள்

நீந்திப்பரவுகிறது.


குருவி ஒன்றின்

கீத ஒலி

ஸ்வரசச்ரமாய்

இறங்குகிறது உடலுள்.


உணர்வுகள் தோறும்

மெதுமெதுவாய்

பூக்கள் முகையவிழும் ஓசை


எரிவுடன்

விழிவழியே

திரள்கிறது கண்ணீர்.


போர்வையை

ஒருக்கழித்து எழும்புகையில்

வானத்தில் விடிவெள்ளி.


சூரியன் தனது பயணத்திற்காய் மீண்டும்.


நளாயினி
10- 08-2007

Sunday, September 16, 2007

ஓவியம். 09/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Wednesday, September 05, 2007

ஓவியம். 04/05/2006

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Sunday, September 02, 2007

வண்ணங்கள்.



புகைப்படப் போட்டிக்கு என்னுடைய படைப்புகள்.
இதுபற்றி விபரம் அறிய இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.

Thursday, August 30, 2007

ஓவியம். nalayiny 24/06/2007


ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Tuesday, August 21, 2007

ஓவியம். (15/06/2007)

ஓவியத்தின் மேல் கிளிக் செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.

Tuesday, August 14, 2007

பூக்கள் பேசிக்கொண்டால்........! (2)



னது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக்கண்டதும் ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கே தெரியாமல்
என் செவி தடவிப்போகும்
உந்தன் செருமல்.

***


ந்தன் கைவிரல்களோடு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.

***


ன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட..! என் விழிகள்
எப்போது போச கற்றுக் கொண்டன. .!

***


ன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்பூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.

***


தடுகள் நோகாமல்
எப்படி உன்னால் பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள் சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில கதிர் கற்றைகள்.
உந்தன் பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த ஒளிக் கீற்றுகள்.

***


ன் வருகைக்காக காத்திருந்தேன்
இருள் எனைச்சூழ.
தூர உன் வருகையை
ஏனோ உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சூழ அழகிய பலஒளிவண்ணம்.

***
நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....