Monday, May 07, 2007

என்ன சொல்ல.. என்ன சொல்ல.!



* மழலைத் தமிழ் பேசுகிற போது
தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.

* நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

* உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.

* உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.

* உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.

* உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.


நளாயினி தாமரைச்செல்வன்.

1 comment:

காட்டாறு said...

குழந்தையும் அழகு; கவிதையும் அழகு!