Friday, January 20, 2006

பொல்லாத அத்தை!?

"ஆ.. இந்த அத்தை வந்தாலே இப்பிடித்தான். நான் சரியான குழப்படி எண்டு என்னை உறுக்கி இந்த கதிரையிலை இருத்திப்போட்டு கமறைவை கையிலை எடுத்துவைச்சுக்கொண்டு சிரிங்கோ சிரிங்கோ எண்டா எப்பிடி சிரிக்கிறது. எனக்கு கோவம் கோவமா வருது. வரட்டும் என்ரை அப்பா இண்டைக்கு அத்தை பேசினதை சொல்லுவன்ன்ன். "


திரும்ப திரும்ப என்னை உறுக்கினாலும் எண்ட பயத்திலை நான் அப்பாக்கு ஒண்டும்மே சொல்லேலை. பிறகெதுக்கு என்னை திரத்தி திரத்திக்கொண்டு வாறா . ஒண்டுமா புரியேலை. ஓ..!



Wednesday, January 04, 2006

ஒன்று +ஒன்று =அடடா..!! சம்பந்தா சம்பந்தமில்லாமல்..?!!




சென்னையில் 29 ஆவது புத்தக கண்காட்சி எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் தை மாதம் 16 ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது என்பது யாபேரும் அறிந்ததே.


அதில் எனது நந்கூரம்; உயிர்த்தீ ஆகிய கவிதைத்தொகுதிகளும் ஐPவனின் (நந்தா கந்தசாமி கனடா) அட்டைப்பட வடிவமைப்புடன் உயிர்மைப்பதிப்பகத்தினரால் வெளியீடுசெய்து வைக்கப்படுகிறது என்பதனை அனைத்து வலைப்பதிவு உள்ளங்களிற்கும் தெரியப்படுத்தவதில் மகிழ்வு கொள்கிறேன்.

இவ்விரு கவித்தொகுப்புக்களையும் இப்புத்தகக் கண்காட்சியில் உயிர்மைப்பதிப்பகத்தின் விற்பனை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களிற்கு...
http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=429&Itemid=63
நந்தா கந்தசாமியின் ( ஐPவனின்.) சில ஓவியங்கள்
http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70&catid=11
அப்பால் தமிழுக்கு மிக்க நன்றி.
http://www.appaal-tamil.com/