Monday, March 31, 2008

பூக்கள் பேசிக்கொண்டால்.... ! ( 7)



*
மர அடியில்
உதிர்ந்த இலைகள்.
நுனிப்பகுதியில்
இன்னும் பல இலைகளை
தளிர்க்கச்செய்தபடி
கவிதைகளாய்...!
அப்படித்தான் நீ எனக்குள்.

*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.

*
வானம்
குளித்து முடித்து
இறுதியாய்
வீழ்ந்த மழைத்துளியில்
சிலிர்த்துக்கொண்ட
பூவைப்போல்
பிறந்தவர்கள் தான் நானும் நீயும்:

*
உன் கைப்பிடியின் மென்மை
அத்தனை இயற்கையையும்
நலம் விசாரித்துப்போவதாய் எனக்குள்.

*
இந்த இயற்கையின் அவசியம்
அத்தனை உயிர்க்கும் எப்படியோ
அதைப்போலவே எனக்கு நீ.

நளாயினி.

பூக்கள் இன்னும் பேசும்.....

Sunday, March 23, 2008

ஓவியம். 22/2/2008

ஓவியத்தின் மேல் கிளிக்செய்தால் பெரிதாக பார்க்க முடியும்.
Copyright © nalayiny