Wednesday, October 05, 2005

எப்போதும் சூரியனாய்.........



அந்த மாலைப்பொழுதின்
மதுரமாக நீ.
சூரியக் கதிர்கள் போல்
உன் விழிகள்.
உன் பார்வையில்
ஓர் குளிர்மை.
உன் தேசிப்பழ நிற மேனி
ஏனோ என்னை அதிகம் கொல்கிறது.
சூரியனோ தன் சேவை முடித்து
ஓய்வு பெற நீ மட்டும்
எனக்கு எப்போதும் சூரியனாய்.
நீ குளித்து விட்டு
தலை முடியைஉதறிய
நீர்த்துளியில்பூத்தது தான்
உன் மீதானகாதல்.
உன் குரல்செவி வழிபாய்ந்து
மனதை அள்ளும்.
உன் வார்த்தையின்
மென்மையில்
கன்னம் வைத்து
துயிலும் மனசு.
உன் தமிழ்த் தோட்டத்துள்
நீ கொய்து அனுப்பும்
வாசனை வார்த்தைகளின்உறுதி
நிச்சயமாய்
உன் மீதானகாதலுக்கு
மாலை சூட்டும்.
இப்போதெல்லாம்
எப்போதும்
உன் நினைவாய்.
உயிரும் , மனசும்
என்னிடமில்லை.
அவை இப்போ
புதிய அத்தியாயத்தை
பிரசவித்து நிற்கிறது.
நளாயினி

2 comments:

rahini said...

vanakkam.
sukama...?
UNGKAL ELUTHTHIN AATTAL ENAI iirththukondathu
meelum valara en vaalththukkal
rahini
germany

உன் நினைவாய்.
உயிரும் , மனசும்
என்னிடமில்லை.
அவை இப்போ
புதிய அத்தியாயத்தை
பிரசவித்து நிற்கிறது

arumaiyaan varikal.
ennai aarpparithu

rahini said...

arumaiyaan varikal.
ennai aarpparithukkondathu...