Thursday, October 13, 2005

இன்ப வலி.

உன்னை
என் விழிகள்கண்டதும்
என்னமாய் படபடக்கும்.
அதனூடே
கூச்சமும்
காதலும்
என்னுள்
பவனி வரும்.
எனக்கு அருகில்
நீ வரும் போது
பூகம்ப அதிர்வு.
எங்கே
நம்மை காதலர்
என இனம்
கண்டிடுவரோ என.
ஒளிந்து ஒளிந்து
காதலிப்பதில் தான்
எத்தனை சுகம்.
யாருக்கும்
தெரியாமல்
உன் நினைவுகளை
சுமந்தபடிநானும்
என் நினைவுகளை
சுமந்த படி நீயும்
காத்திருக்கும்
காத்திருப்புகள்
எவ்வளவு
அற்புதமானவை.
நளாயினி தாமரைச்செல்வன்

2 comments:

Vaa.Manikandan said...

காத்திருப்புகள்
எவ்வளவு
அற்புதமானவை.

evvaLavu aRputham? :)

good one!

நளாயினி said...

mm..¨! nerauja arputham.¨!