Thursday, October 20, 2005

எனக்குள் எரியும் நெருப்பு.


என் பிறப்பே உனக்கென்றாய்.
உன் விழி கொண்டு
அன்பைஊற்றெடுக்க
செய்தாய் என்றாய்-
என் இனியவளே
இனி நீயே-என்
இதயம் என்றாய்-
உன்சிரிப்பே
என் ஒளி என்றாய்.
உதயம் என்றாய்.
உன்னிப்பாய்
என் செவிகள்-
உன்உயிர்ப்பை
புரிந்தன.
உயிர்ப் பூக்களாய்
இப்புவியில்
உலா வருவோம்
என்றாய்.
உன்உருவத்திலும்
அன்பு உயர்வாய்
எனக்கு.
உன் கண் சிமிட்டலில்
நசிந்தேன் என்றாய்.
ஏன் தூரம் சென்றாய்?
உன் நினைவுகள்
மட்டுமே என்னிடம்.
ஏனோ என் நினைவுகள்
இன்னும் உனக்காய்
உயிர்ப்புடன்.
இன்றும் உன்னிப்பாய்
உன்குரலுக்காக
என் செவிகளை
செவிடாக்காது.

நளாயினி தாமரைச்செல்வன்

No comments: