Saturday, October 15, 2005

பூஜிக்கத் தொடங்கி விட்டேன்.


என் இதயத்தில்
நீ புரண்டெழுவதை
உணர்கிறது மனம்.
என் இதயம் துடிக்கிறதா?
உன் பெயரை உச்சரிக்கிறதா?
துடிப்பும் உச்சரிப்பும்
ஒன்றாய்த் தெரிகிறது.
இல்லை, இல்லை
சந்தேகம் தெளிந்தது
லப், டப் எனும்இதயம்
இப்போ உன் பெயரைத்தான்
உச்சரித்துக் கொள்கிறது.
உன் பெயரை
உச்சரிக்கத் தெரிந்த
இந்தஇதயத்திற்கு
உன்னிடம் ¨
என் காதலைச் சொல்லும்
தைரியம்ஏன் இல்லை?
ஓ! என் உதடுகளுக்கு
உன் முகவரி இட்டு
காதல்க் கடிதத்தை
அனுப்பட்டும் இதயம்.
நளாயினி தாமரைச்செல்வன்

No comments: